நானும் கற்பனை மன்னன் தான் !
ஆனால், நான் கட்டும் கற்பனை கோட்டைகள்
நம் அரசு கட்டும் பாலங்களைபோல
இடிந்து விழாது.
அவள் என்னை விட்டு விலகியதற்காக
வருத்தப்படவில்லை.
கண் கலங்கவும் இல்லை.
மாறாக, சந்தோஷப்படுகிறேன்.
ஏனெனில், இப்பொழுது தான்
எனக்கு கவிதை (?) எழுத / கிறுக்க தெரிகிறதே !
நீங்களும், கவிதை எழுத விரும்புகிறீர்களா?
உங்கள் காதலை தோல்வி அடையச் செய்யுங்கள் !
Thursday, April 23, 2009
வெட்கம்
இடைத்தேர்தல்
பேருந்திற்காக காத்திருக்கும்
பயணியைப் போல்,
தாய்க்காக ஏங்கி தவிக்கும்
குழந்தையைப் போல்
உன் வருகையை எதிர்நோக்கியிருக்கும்
என்னை......
ஏமாற்றி விட்டு
இடைத்தேர்தலைப் போல்
திடிரென்று வந்து நிற்கிறாயே !
பயணியைப் போல்,
தாய்க்காக ஏங்கி தவிக்கும்
குழந்தையைப் போல்
உன் வருகையை எதிர்நோக்கியிருக்கும்
என்னை......
ஏமாற்றி விட்டு
இடைத்தேர்தலைப் போல்
திடிரென்று வந்து நிற்கிறாயே !
உன் கூந்தல்
வர்ணனை
அன்பே !
உன்னை தேவலோக கன்னி என வர்ணிக்க மாட்டேன்
ஏனெனில் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்
தாமரை மலரோடும் ஒப்பிடமாட்டேன்.
ஏனெனில், தாமரை மலரில் பல வண்டுகள் வந்து தேன் குடித்து செல்லுமே !
உன்னை தேவலோக கன்னி என வர்ணிக்க மாட்டேன்
ஏனெனில் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்
தாமரை மலரோடும் ஒப்பிடமாட்டேன்.
ஏனெனில், தாமரை மலரில் பல வண்டுகள் வந்து தேன் குடித்து செல்லுமே !
Subscribe to:
Posts (Atom)